பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் பகுதியில் கனமழைக்கு அரசு தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. வெள்ளிக்கிழமை காலையும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தொடர் மழையால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், பாவூர்சத்திரம் அருகில் உள்ள அயன் குறும்பலாப்பேரியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்த சேதம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுற்றுச்சுவர் இடிந்த விழுந்த பள்ளியின் கட்டடம் பலவீனமாக இருப்பதாகவும், அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் காவல்நிலையம் முன்பு குவிந்த திமுக தொண்டர்கள்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் நாளைக்குள் கையெழுத்தாகும்: அமெரிக்கா நம்பிக்கை

முதலில் மறுப்பு; பிறகு சம்மதம்... செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை!
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple


