தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் தவிப்பு

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் தவிப்பு
Published on
Updated on
1 min read

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில் மூலம் சென்னை நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - பூங்கா ரயில் பாதையில் உயர்மின்அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டதால் நேரத்திற்கு பணிக்கு செல்வோர் தவித்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com