திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தாய், தந்தையாக இருப்பேன்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ்

தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன் என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

News image
தாய், தந்தையாக இருப்பேன்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ்
Updated On :10 நவம்பர் 2022, 10:48 am

DIN

திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 68 மாணவர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன் என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

இணையவழி விநாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 மாணவ, மாணவிகள், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று துபைக்கு கல்விச் சுற்றுலா புறப்பட்டனர்.

மாணவ, மாணவியருடன் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், மாணவ, மாணவிகளுக்கு எந்த திறமையாக இருந்தாலும் அதனை ஊக்குவித்து, அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

YouTube video thumbnail

மேலும், இன்று துபை செல்வது, புதிய அனுபவமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு அமையும். நாம் பள்ளியில் படிக்கும் போது, பக்கத்தில் இருக்கும் மாவட்டத்துக்குத்தான் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். ஆனால் தற்போது தமிழக அரசால், பள்ளி மாணவர் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று பத்திரமாக அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பு. இந்த நான்கு நாள்களுக்கும் அவர்களுக்கு தாயாவும் தந்தையுமாக நான்தான் இருக்கப்போகிறேன். 

Story image

இந்தச் சுற்றுலாவுக்கு தமிழக அரசிடம் அனுமதி மட்டும்தான் பெற்றுள்ளோம். இது சிஎஸ்ஆர் நடவடிக்கை மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே விநாடி- வினா போட்டி நடத்தி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள்தான் இவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியில் சிறந்து விளங்கும் சுமாா் 60 மாணவா்கள் மற்றும் அவா்களுடன் செல்ல சில ஆசிரியா்களை ஐக்கிய அரசு அமீரக நாட்டிலுள்ள துபை நகரத்துக்கு இலவசமாக கல்விச் சுற்றுலா மற்றும் ஷாா்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அந்த வகையில், கடந்த 8.9.2021 முதல் 8.11.2021 வரை இணைய வழியில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய, தற்போது பிளஸ் 1 வகுப்பு பயிலும் 68 மாணவ, மாணவிகள் மற்றும் 5 ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் 3 போ் என மொத்தம் 76 நபா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் துபைக்கு நான்கு நாள்கள் (நவ.10 முதல் 13 வரை) கல்விச் சுற்றுலாவுக்கும், ஷாா்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.