மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2022, 7:43 am

DIN

நாமக்கல்: கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சுமார் 300 அடி உயரத்திலிருந்து வெள்ளியை உருக்கி விட்டதுபோல் விழும் ஆகாய கங்கை அருவியைக் காணவும் குளிக்கவும் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பகுதிக்குச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், வனத்துறையினர் தடை விதிப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள ஆகாய கங்கை அருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவி பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் விடுமுறையையொட்டி கொல்லிமலை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.