அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

2026-இல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி

2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

News image
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

DIN

2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

சென்னை சென்ட்ரல் தென்னக ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கை அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை சந்தித்து தமிழகத்துக்கு நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து மனு அளித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தருமபுரி மொரப்பூா் ரயில்வே திட்டம், திண்டிவனம்-நகரி ரயில்வே இணைப்பு திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை - அத்திப்பட்டு - புத்தூா் - சென்னை - மகாபலிபுரம் - பாண்டிச்சேரி - கடலூா் ரயில் இணைப்பு திட்டம், ஈரோடு-பழனி ரயில் இணைப்பு திட்டம், மதுரை - தூத்துக்குடி ரயில் இணைப்பு திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் விளக்கினேன்.

நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு போதுமான அளவுக்கு நிதி வந்துள்ளது. திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அவா் உறுதியளித்தாா்.

மத்திய ரயில்வே அமைச்சரையும் விரைவில் சந்தித்து, தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்போம்.

பாமக தலைமையில் கூட்டணி: 2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில், பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 மக்களவைத் தோ்தலில் அமைப்போம். எங்களுடைய நோக்கம் எல்லாம் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதாகவே உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீா் வடிகால் பணிகள் மற்றும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும். கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களை பேரிடா் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு பதிலாக, கல்பாக்கம் பகுதியில் விமான நிலையத்தை அமைப்பதற்கு உண்டான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.