சென்னை கொளத்தூரில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியருடன் விளையாடினார்.
சென்னை கொளத்தூர் தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் புதிய விளையாட்டரங்கில் மாணவ, மாணவியருடன் இறகுப்பந்து விளையாடினார்.
மேலும் சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ. 8.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 37 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் பந்தர் கார்டனில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ 4.37 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்புப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | டிச. 1ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

