டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூரில் 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட மக்கள்!

வேலூர் மாவட்டம் ஒடுக்கதூர் அருகே இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து மக்கள் வனப்பகுதியில் விட்டனர். 

News image
Updated On :25 நவம்பர் 2022, 2:58 am

DIN

வேலூர் மாவட்டம் ஒடுக்கதூர் அருகே இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து மக்கள் வனப்பகுதியில் விட்டனர். 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவரராஜாபாளையம் கிராமத்தில் நேற்று (24.11.2022) இரவு அங்குள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உடனடியாக இதுகுறித்து ஒடுக்கத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வர தாமதமானதால் பொதுமக்களே மலைப்பாம்பைப் பிடித்து கோணிப்பையில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.