திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேட்டூர் அணை: கிழக்கு-மேற்கு கால்வாய் பாசன நீர் திறப்புக் காலம் நீட்டிப்பு

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும்.

News image
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :29 நவம்பர் 2022, 1:30 pm

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிப்பு.

மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும் நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,23 0ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.

கிழக்குக்கரை கால்வாய் மூலம் 27,000 ஏக்கர் நிலமும் மேற்கு கரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கர் நிலமும் மொத்தத்தில் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசன தேவை குறையும்.

பாசன காலம் முடிவடைந்த பிறகும் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் குறித்த நாளுக்கு முன்பாக ஜூலை 16ஆம் தேதி முதல் 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 6.5 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று நீர்வளத்துறை பரிந்துரையின் பேரில் தண்ணீர் திறப்பு காலம் நவம்பர் 30-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை 47 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மேற்கு கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.