கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாதவர்கள் யாரும் ஆறுகளில் இறங்க வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த 54 பேர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா கோவிலுக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.
அப்போது பூண்டி செங்கரையூர் கொள்ளிடம் பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது ஆறு பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இதில் 4 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், தெர்மஸ் என்பவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.
இந்நிலையில் காணாமல் போன 6 ஆவது நபரான ஈசாக்கை தேடும் பணி 2-வது நாளாக நீடிக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மீட்கப்பட்ட 5 பேரின் உடல்கள் திருவையாறு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை பகுதிக்கு சுற்றுலா வருகிறவர்கள் நீச்சல் தெரியாவிட்டால் ஆறுகளில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் எச்சரிக்கை பலகை வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: ராஜபட்சவுக்கு சம்மன்
கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


