நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

2023-24-ல் ஐ.டி. நிறுவன ஆள் சேர்ப்பு 20% குறையும்!

2023-24-ம் ஆண்டில் புதிய ஊழியர் சேர்க்கையை 20% குறைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :5 அக்டோபர் 2022, 6:58 pm IST

2023-24-ம் ஆண்டில் புதிய ஊழியர் சேர்க்கையை 20% குறைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியாவில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார பின்னடைவை எதிர்பார்த்து புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தவதை ஐ.டி. நிறுவனங்கள் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணினி மென்பொருள்களுக்கான சந்தை இந்த ஆண்டு சிறப்பாக உள்ளபோதிலும் பணியாளர்கள் விலகல் அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் 50,000 பேரை பணியில் சேர்க்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் விப்ரோ 30,000 பேரையும், டி.சி.எஸ் புதிதாக 40,000 பேரையும் பணிக்கு அமர்த்த உள்ளன. எச்.சி.எல். டெக்னாலஜீஸ் இவ்வாண்டு 45,000 பேரையும், டெக் மகேந்திரா நிறுவனம் 15,000 பேரையும் பணிக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனினும் 2023-24 நிதி ஆண்டில், இவ்வாண்டைவிட 20% குறைவாக புதிய பணியாளர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.