விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் பரபரப்பு... பேருந்து நிலைய கட்டுமானப் பணி வட மாநில தொழிலாளர்கள் திடீர் தர்னா!

தூத்துக்குடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீரென வேலையை புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.     

News image

தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள்

Updated On :6 அக்டோபர் 2022, 6:29 am


தூத்துக்குடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீரென வேலையை புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.     

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணியில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்றும் உணவு போன்ற வசதிகள் செய்து தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநில கட்டட தொழிலாளர்கள் வியாழக்கிழமை தங்களது பணிகளை புறக்கணித்து பேருந்து நிலைய கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.   

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், வட மாநில தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து சிமென்ட், கல் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் பொருள்களை இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.