நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தூத்துக்குடியில் பரபரப்பு... பேருந்து நிலைய கட்டுமானப் பணி வட மாநில தொழிலாளர்கள் திடீர் தர்னா!

தூத்துக்குடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீரென வேலையை புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.     

News image

தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள்

Updated On :6 அக்டோபர் 2022, 11:59 am IST


தூத்துக்குடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீரென வேலையை புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.     

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணியில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்றும் உணவு போன்ற வசதிகள் செய்து தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநில கட்டட தொழிலாளர்கள் வியாழக்கிழமை தங்களது பணிகளை புறக்கணித்து பேருந்து நிலைய கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.   

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், வட மாநில தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து சிமென்ட், கல் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் பொருள்களை இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.