டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:14 pm

DIN

மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்ட தா்மபதியில் புரட்டாசி மாத திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகு விமரிசையாக் கொண்டாடப்படும். இதேபோல், இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா அக்டோபா் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, தினமும் திருஏடு வாசிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் அய்யா அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிவலம் வருவாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.