47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புரட்டாசி சனி: ஈரோடு பெருமாள் கோயில்களில் திரளானோர் தரிசனம்!

புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோட்டில் பெருமாள் கோயில்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 6:15 am

DIN

புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோட்டில் பெருமாள் கோயில்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் ஆலயம், சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலையில் உள்ள மங்கள கிரி பெருமாள் ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட படியேறி சாமி தரிசனம் செய்தனர். 

Story image

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் மங்கள கிரி பெருமாள் ஆலயம் உள்ளது. 2,000 படிகள் உள்ள மலையின் மேல் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆதிநாராயண பெருமாள் உள்ளார்.

Story image

புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை ஒட்டி பவானி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று 2 கிலோ மீட்டர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

Story image

அதேபோல ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.