அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சேலத்தில் மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய கணவர்!

சேலத்தில் மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 8:09 am

DIN

சேலத்தில் மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

சேலம் சீலநாயக்கன்பட்டி வேலநகர் தெருவில் ராஜசேகரன்(42) அவரது மனைவி கார்த்திகை தேவி(35) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்தி என்ற மகள்(10) உள்ளார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார் ராஜசேகரன். 

இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜசேகரன் வீட்டிலிருந்து தப்பியோடி உள்ளார். அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுந்துள்ளார். 

வீட்டின் அருகிலிருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகை செல்வி சடலமாகக் கிடந்துள்ளார். உடனே இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தலைமறைவாக உள்ள கணவர் ராஜசேகரனை பிடித்தால் தான் உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ராஜசேகரனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.மேலும் அருகில் உள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.