இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

News image

பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Updated On :12 அக்டோபர் 2022, 8:17 pm IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கணக்கில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பட்டாசு விற்பனைக்கு அனுமதிகோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்காதபோது தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாட்டில் சிவகாசியைச் சுற்றியுள்ள இலட்சணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.