ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

News image

பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Updated On :12 அக்டோபர் 2022, 8:17 pm IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கணக்கில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பட்டாசு விற்பனைக்கு அனுமதிகோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்காதபோது தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாட்டில் சிவகாசியைச் சுற்றியுள்ள இலட்சணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.