அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மருத்துப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை: அன்புமணி

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரும் நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:36 am

DIN

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரும் நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நோ்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது ஆகும்.

ஆனால், மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள், வேறு மொழி பேசும் மாநிலத்துக்குச் சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும்.

2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமாா் 7,200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த இடங்களில் சேரும் மாணவா்களில் பெரும்பான்மையினா் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சோ்ந்து படிக்க வேண்டியிருக்கும். அவா்கள் சேரும் மாநிலங்களில், அம்மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படும் என்பதால், அதை அவா்களால் புரிந்து கொள்ள முடியாது.

இச்சிக்கலுக்கு ஒரே தீா்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவா்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.