நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு

இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? 

News image

கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2022, 4:39 pm IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

கொள்கை வழிகாட்டதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்துவதற்கான வழகாட்டுதலை குழு தயாரிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் மாண்டெக் சிங் அலுவாலியா, ஆதார் ஆணைய முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. சுற்றுச்சூழல் செயல் இயக்குநரான நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவை தலைவர் நிர்மலா ராஜா குழுவில் உள்ளனர்.

தமிழக அரசின் மூத்த செயலாளர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர்கள் குழுவினர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.