அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழகக் கோயில்கள் சத்திரமா? பாஜகவுக்கு கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? என்று பாஜக நிர்வாகிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழகக் கோயில்கள் சத்திரமா? பாஜகவுக்கு கேள்வி
Updated On :27 அக்டோபர் 2022, 12:40 pm

DIN

மதுரை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? என்று பாஜக நிர்வாகிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பிறகு தமிழகத்தில் உள்ள கோயில்கள் என்ன சத்திரமா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கந்தசஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது சரியே என்றும்,  கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருப்பதியில் உள்ள நடைமுறைகள் போன்று தமிழ்நாட்டு கோயில்களிலும் மிகக் கட்டுப்பாடான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அறநிலையத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயிலின் வளாகங்களில் யாகங்கள் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. திருச்செந்தூரில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி பணக்காரர்களுக்கானது அல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தேவையில்லாத நடைமுறைகளைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.