தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யம் அருகே கனமழை: வயல்களில்  பெருக்கடுத்த மழை நீர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி ஏற்பட்ட  கனமழையால் நெல் தரிசு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

News image

வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம்  கிராமத்தில் நேரடி நெல் விதைப்புக்கு ஆயத்தமான  வயல்களில் தேங்கிய மழை நீர்.

Updated On :1 செப்டம்பர் 2022, 9:16 am

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி ஏற்பட்ட  கனமழையால் நெல் தரிசு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

உப்பு உற்பத்தி முழுமையாக  பாதிக்கப்பட்டுள்ளதோடு, வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி நெல் விதைப்புப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த வாரம் தொடங்கி அவ்வப்போது  மழைப் பொழிவு இருந்து வந்தது. புதன்கிழமை மாலை தொடங்கி வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில்  கனமழை  கொட்டித் தீர்த்தது.

இந்த மழை வேதாரண்யம் நகரப் பகுதியை விடவும் வாய்மேடு, கரியாப்பட்டினம், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம்,குரவப்புலம் சுற்றுப் பகுதியில் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் அதிக அளவாக உணரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.