மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மின் உற்பத்தியும் குறைந்தது!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 4:18 am

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான தேக்கடி மற்றும் பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்ததால், ஒரே நாளில் நீா் வரத்து அதிகரித்த நிலையில், தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வியாழக்கிழமை குறைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணைக்குள் புதன்கிழமை வினாடிக்கு, 2,272 கன அடி தண்ணீர் வந்தது, தமிழக பகுதிக்கு தண்ணீர் வினாடிக்கு, 1,822 கன அடியாக திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் வியாழக்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 2,958 கன அடி தண்ணீர் வந்த நிலையில், தமிழக பகுதிக்கு வினாடிக்கு, 933 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. 

இதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 17.20 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 19.20 மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.