மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாய தோட்டத்தில் காட்டுமாடுகள்: பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில்  10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 12:40 pm

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில்  10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  ராமநாயக்கன்பாளையம் காராமணி திட்டுப் பகுதியில்  விவசாய நிலங்களில் விசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர், அங்குள்ள விவசாய தோட்டங்களின் அருகே உள்ள கல்வராயன்  வனப்பகுதியில் இருந்து காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது.

இது குறித்து ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக  சேலம் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரிடமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்  வழக்கம்போல் இன்று அதிகாலையில் 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து மருதமுத்து-வின் விவசாயத் தோட்டத்தில் உள்ள மஞ்சள், சோளம் ஆகிய விளை பயிர்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டத்துக்குள் வனவிலங்குகள்  நுழையாதவாறு தமிழக அரசும் வனத்துறையினரும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.