கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விவசாய தோட்டத்தில் காட்டுமாடுகள்: பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில்  10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 12:40 pm

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில்  10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  ராமநாயக்கன்பாளையம் காராமணி திட்டுப் பகுதியில்  விவசாய நிலங்களில் விசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர், அங்குள்ள விவசாய தோட்டங்களின் அருகே உள்ள கல்வராயன்  வனப்பகுதியில் இருந்து காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது.

இது குறித்து ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக  சேலம் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரிடமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்  வழக்கம்போல் இன்று அதிகாலையில் 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து மருதமுத்து-வின் விவசாயத் தோட்டத்தில் உள்ள மஞ்சள், சோளம் ஆகிய விளை பயிர்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டத்துக்குள் வனவிலங்குகள்  நுழையாதவாறு தமிழக அரசும் வனத்துறையினரும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.