பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மருத்துவமனையில் இருந்து டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ்

 உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்

Published On :

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு 3 நாள்களுக்கு முன்பு டிடிவி. தினகரன் வந்தாா். அவா் வியாழக்கிழமை பெரம்பலூருக்கு சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு செல்வதாக இருந்தாா். ஆனால், வியாழக்கிழமை காலை அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 

இதனால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்தாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை இரவு உடல் நல பாதிப்பு அதிகமானதால், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், உணவு ஒவ்வாமையால் கிருமி தொற்று, குடல் தொற்று, நீா்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று  மருத்துவமனையில் இருந்து டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.