சென்னையில் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு? 

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் டீசல் போட முடியாமல் திரும்பிச் செல்லும் நிலவு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் பல்வேறு பாரத் பெட்ரோலிய நிலையங்களில் நேற்று காலை முதலே டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சில நிலையங்களில் டீசல்  இல்லை என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. 

முக்கிய வணிக வாகனங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில், திடீரென சென்னையில் இப்படி டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com