மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை

சேலத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்களிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி பெண் நகர் மன்ற உறுப்பினர் குடும்பத்துடன் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 12:16 pm

DIN

சேலம்: ஆளுங்கட்சி பிரமுகர்களிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி
பெண் நகர் மன்ற உறுப்பினர் குடும்பத்துடன் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினர் என்பதால் எந்த ஒரு பணியையும் செய்யவிடாமல் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிரேகா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்மன்ற உறுப்பினர் பொதுத் தேர்தலில் ராசிபுரம் நகராட்சியில் வார்டு 12-ல் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.

இவர் இவரின் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சி பிரமுகர்கள் எங்களை மீறி உங்களால் என்ன செய்ய முடியும் என்று பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து  வருவதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில், இன்று சுயேச்சை பெண் நகர் மன்ற உறுப்பினர் குடும்பத்துடன்
சேலம் சரக  காவல் துறை துணை தலைவர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கினார்.

மேலும், அவர் கூறுகையில், எனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நான் இ- சேவை மையம் மற்றும் சொந்த செலவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளேன். இந்த நிலையில் அங்கு உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் என்னை பணி செய்ய விடாமல் எனது வார்டுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் ஒதுக்கீடு செய்யாமல் என்னை புறக்கணித்து வருகின்றனர். தான் ஒரு பெண் என்று கூட பாராமல் மிரட்டல் விடுத்தும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து, உனது கணவரை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்

மேலும், எங்களை எதிர்த்து அரசியல் செய்து வாழ்ந்திட முடியாது என்று மிரட்டுகிறார்கள். எனவே, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கும் என் கணவர் சதீஷ் மற்றும் எங்கள் குடும்பத்தாருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.