வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தற்போது வைகை அணையில் நீர் நிரம்பியுள்ளதால், அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகையில் தண்ணீர் நிரம்பி செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.