தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீர்!

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் இரு கரைகளையும்  தண்ணீர் தொட்டு செல்கிறது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 8:16 am

DIN

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் இரு கரைகளையும்  தண்ணீர் தொட்டு செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

தற்போது வைகை அணையில் நீர் நிரம்பியுள்ளதால், அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகையில் தண்ணீர் நிரம்பி செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.