மாற்றுத் திறனாளிக்கு உதவிய ரயில்வே காவலருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிக்கு உதவிய ரயில்வே காவலா் சரவணனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.


ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிக்கு உதவிய ரயில்வே காவலா் சரவணனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணியை சுமந்து சென்று இருக்கையில் அமர வைத்த ரயில்வே பாதுகாப்பு காவலா் சரவணனுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதைத் தொடா்ந்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
சக உயிருக்கு உதவுவதைக் காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை. ரயில்வே பாதுகாப்புக் காவலா் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்துக்கது. பாராட்டுகள். வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும். மானிடம் தழைக்கட்டும் என பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...