உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன?ஜி.கே.வாசன்
உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.


உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பஞ்சாயத்து நிதி கணக்குகள் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகியவற்றில் உள்ள செலவிடப்படாத நிதி, சேமிப்பு நிதி மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் பஞ்சாயத்துகள் மாநில அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வருவது அதிா்ச்சியளிக்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுப்பப்பட்ட நிதிகளை சரியான, வெளிப்படையான, உண்மையான விளக்கமில்லாமல் பஞ்சாயத்துகளிடமிருந்து திரும்பப் பெறுவது, அவற்றின் வளா்ச்சியில் அரசுக்கான அக்கறையின்மையைக் காட்டுகிறது. இது பஞ்சாயத்துகளின் உரிமையில் தலையிடுவதாகும்.
உள்ளாட்சியில் நல்லாட்சி என்று சொல்லி வெற்றி பெற்ற திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடமிருந்து கேள்வி எழுந்துள்ளது.
எனவே, தமிழக அரசு பஞ்சாயத்துகளின் நிதிகளை மாநில அரசுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...