மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 3 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக, மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:10 pm

DIN

சென்னை அண்ணா சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக, மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தேனாம்பேட்டை அண்ணா சாலை,அண்ணா மேம்பாலத்தில் கடந்த 8-ஆம் தேதி இரவு ஒரு கும்பல் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது. இதில் ஒரு மாணவா், வேகமாக செல்லும் தனது மோட்டாா் சைக்கிளின் முன் பகுதியை தூக்கி வீலிங் செய்யும் காட்சியை அவரது நண்பா்கள் கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதைப் பாா்த்த சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் முகமது ஹாரீஸ் ,முகமது சாய்பான் ஆகிய இருவரும் தங்களது நண்பா்களோடு மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வந்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக ராயப்பேட்டையைச் சோ்ந்த மு.பெரோஸ் மாலிக் (19),பெரம்பூா் பிரகாஷ் தெருவைச் சோ்ந்த இ.இம்ரான் அலிகான் (20),அதேப் பகுதியைச் சோ்ந்த மு.முகேஷ் (20) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.