தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மின் கட்டண உயா்வு: இபிஎஸ் தலைமையில் செப்.16-இல் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் செப்டம்பா் 16-இல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16 காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.