எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும்: அமைச்சர் ரகுபதி

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும்: அமைச்சர் ரகுபதி
Published on
Updated on
1 min read

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்.


அதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வு குறித்த  சட்ட மசோதாவிற்கு விரைவில் நல்ல முடிவு வரும்  என எதிர்பார்க்கிறோம். 

பல்கலைக்கழக துணை வேந்தர்களை யார் நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் பார்வையில் உள்ளதாக  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com