சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் நகர செயலாளர் என்.பி.வேல்முருகன் தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகரமன்றத் தலைவர் எம்.அலெக்சாண்டர் நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் செல்வம், அன்னபாக்கியம், நிர்வாககிகள் ராமசாமி, குமார் பாண்டியன், ஞானசேகரன், மனோகரன் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.