கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின் கட்டண உயா்வு: அதிமுக ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:24 pm

DIN

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்தியது கண்டிக்கத்தக்கது என்றும், அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, மின் கட்டணத்தை 52 சதவீதம் வரை உயா்த்தி, திமுக அரசு மக்களைத் துயரத்துக்கு உள்ளாக்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

சென்னை பட்டாளத்தில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையிலும், எம்ஜிஆா் நகரில் மாவட்டச் செயலாளா் விருகை வி.என்.ரவி தலைமையிலும், தண்டையாா்பேட்டையில் மாவட்டச் செயலாளா் ஆா்.எஸ்.ராஜேஸ் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. தியாகராய நகரில் முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தலைமையிலும், போரூா் காரம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் தலைமையிலும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.