அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அம்பேத்கர் சட்டப் பல்கலை. வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு கல்வெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 7:24 am

DIN


சென்னை: சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு கல்வெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது 4,500 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

1997ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தெற்காசியாவிலேயே முதல் முறையாக சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அதுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டியதும் கருணாநிதிதான். தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அதே பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

சட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்று ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.