ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பொறுத்திருந்து பாருங்கள்' - பண்ருட்டி ராமச்சந்திரனுடனான சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ் பேட்டி!

அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 10:26 am

DIN

அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. 

ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது. 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை உத்தரவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஓரிரு மணி நேரத்திலேயே பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், 'கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்திருந்தோம். ஒரு மணி நேரம் ஆலோசனை செய்தோம். அவர் தனது அனுபவத்தைக் கூறினார். அவரது கருத்தை மக்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் 

எம்ஜிஆர், ஜெயலலிதா  முன்னெடுத்த கொள்கைகளை அவர் மக்களிடம் கூறி வருகிறார். 

பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் சந்திப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.