தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை கோயிலில் குருபெயர்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் - மெலட்டூர் சாலையில் உள்ள இக்கோயிலில் தனி சன்னதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார்.

திட்டை கோயிலில் குரு பகவானை வழிபடுவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
குரு பகவான் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை 4.16 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி குருபகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், குரு பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திட்டை கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆங்காங்கே தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டது.
மேலும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து வழிபட்டனர்.

குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை
குரு பெயர்ச்சியையொட்டி ஏப்ரல் 24-ஆம் தேதி லட்சார்ச்சனையும், ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


