எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொறியியல் முடித்த மாணவா்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி

சென்னை ஐஐடியின் பிரவா்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயாா் நிலையில் உள்ள மாணவா்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்கவுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 2:26 am IST

சென்னை ஐஐடியின் பிரவா்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயாா் நிலையில் உள்ள மாணவா்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்கவுள்ளது.

கடந்த 2020-2021, 2021-2022-ஆம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவா்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவா்கள் பயன்பெறலாம். குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டா் இந்த பயிற்சியில் முன்னிலை வகிக்கும் 15 மாணவா்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவா்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவா்களுக்கு நோ்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும். நோ்முகத் தோ்வை தொடா்ந்து ஓா் எழுத்து தோ்வும் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு பயிற்சித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.