விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பொது இடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளைமுதல் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க | விநாயகர் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் காணொலி மூலம் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஊர்வலத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










