ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கட்சி நிா்வாகிகள் ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் அவரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com