கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆா்ஜென்டீனாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், இதில் தனது அணிக்கு கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக விலகும் கனவை நனவாக்கினார்.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆா்ஜென்டீனாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என்ன ஒரு சிறப்பான போட்டி!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இறுதிவரை மனந்தளராமல் போராடிய பிரான்ஸ் அணியின் ஆட்டமும், பப்பேயின் 'ஹாட்ரிக்' கோலும் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளில் ஒன்றாக இதனை ஆக்கிவிட்டது.
பிபா உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டினா அணிக்கும், அணித்தலைவர் மெஸ்ஸி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். கோல் கீப்பர் மார்டினெஸூக்கு சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.