உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அதிபர் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று புதின் கூறியுள்ளார்.
புதின் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று புதின் கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புடின், ரஷிய நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் பலி மற்றும் ரத்தக்களரிகளுக்கு 'உக்ரைன் ஆட்சியாளர்களே' பொறுப்பு என்று புதின் கூறியுள்ளார்.
ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் முயற்சியும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" ஏற்படுத்தும் என்று புதின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க புதின் உத்தரவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைன் விவகாரம்: ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை