மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:
மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
இதன் மூலம் அதிமுகவின் இடைவிடாத நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தீா்ப்பு பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியா் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிக அளவு இடங்களைப் பெற வழி வகுத்துள்ளது.
ஆனால், மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து, இதற்காக சிறு குரல் கூட எழுப்பாத திமுக, இதனை தனது வெற்றியாக கூறிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவச் சோ்க்கையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா். அந்தக் கோரிக்கை வெற்றிபெறவும் தொடா்ந்து வலியுறுத்துவோம்.