முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம்

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம்

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது குறித்து அறிவுரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுவகைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என்றும்,

2 வாடிக்கையாளர்களுக்கு இடையே கட்டாயம் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 6 பேருக்கு மேல் கடைகளில் அனுமதிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com