சென்னையில் தினசரி கரோனா 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் அதிகபட்சமாக 8,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6,16,959-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 3,176 பேர் குணமடைந்தனர். 8 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,705-ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் புதிதாக 1162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,190-ஆக உள்ளது.
இதேபோன்று சென்னையில் புதிதாக 144 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13, மதுரை 11, தூத்துக்குடி 6, கன்னியாகுமரி 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.