சென்னை: தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள்-தமிழ் இனநாள்-பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கள் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்.
தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிவிடுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.