தமிழகத்தில் புதிதாக 26,533 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,45,376 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 26,533 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 28,156 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | நாட்டிலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 32,79,284 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30,29,961 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,460 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டங்கள்:
சென்னை - 5,246
செங்கல்பட்டு - 1,662
கோவை - 3,448
ஈரோடு - 1,261
சேலம் - 1,387
திருப்பூர் - 1,779