அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ. 18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல்; இருவர் கைது

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
பண்ணாரி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பாக்கு மூட்டைகள் 
Updated On :28 ஜனவரி 2022, 12:10 pm

DIN

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 

தமிழக - கர்நாடக எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீசார் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர். 

அப்போது மைசூரில் இருந்து  வந்த கர்நாடக பிக் அப் வேன்களை சோதனை செய்தபோது காலிபிளவர் மூட்டைகளுக்குள் போதைப்பாக்குகள் கடத்திவது தெரியவந்தது.

Story image

இது தொடர்பாக பிக் அப் வேனில் வந்த  மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசன்னா,(30) சுதி என்கிற சுதாகர்(30) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் காலிபிளவர் காய்கறி லாரியில் போதைப் பாக்குகளை மறைத்து கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இரண்டு பிக் அப் வேன்களையும் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, வி.ஒன். பாக்குகள் மற்றும் கணேசா பாக்குகள் என 75 மூட்டைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சுமார் 2.2 டன்(2,250 கிலோ) போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா கடத்தல் தொடர்பாக பண்ணாரி சோதனையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.