தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக வரவேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணிக் கட்சியினரிடையே ஆதரவு சேகரிப்பதற்காக திரெளபதி முர்மு சனிக்கிழமை சென்னை வந்தடைந்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியினரை சந்திக்கும் திரெளபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற ஆதரவு கோருகிறார்.
இந்நிலையில் அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் திரெளபதி முர்முவை வரவேற்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதையும் படிக்க | மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை: முதல்வர் ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் திரெளபதி முர்முவை இருவரும் இணைந்து வரவேற்பரா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திரெளபதி முர்முவை ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் தனித்தனியே திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










