பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார் விஜயபாஸ்கர்

அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கர் தாக்கல் செய்தார்.

Published On :


அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கர் தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்குழு ஒப்புதல் அளித்த 16 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. 

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். 

வழக்கமாக பொருளாளர் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து விஜயபாஸ்கர் பேசுகையில், இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர் நாளைய நிரந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார். 

அதிமுக கணக்கில் நிலை வைப்புத் தொகையாக ரூ.244.80 கோடி உள்ளது. 
09,01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53,4 கோடி. மொத்த செலவு ரூ.62 கோடி என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.