மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பில்லூர் அணை 97 அடியை எட்டியது... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

News image

பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர்.

Updated On :14 ஜூலை 2022, 4:03 am

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் மொத்த நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Story image

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

இதனால் பவானியாற்றின் கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை,வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை,வெள்ளிப்பாளையம், உள்ளிட்ட ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட்டாச்சியர் மாலதி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.