தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
கனியாமூர் பள்ளி வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல பள்ளிகள் செயல்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர் கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார்.